உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது
என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா?
அது தான் "கம்போடியா" நாட்டில் நம்
கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர்
வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.
அங்கோர் மன்னர்களின் ஆட்சி சுமார் 6-ம் நூற்றாண்டில் தொடங்கியது. பல்லவ மன்னன் சூர்யவர்மன் அங்கோர் வாட்
நகரத்தில் கமய் என்ற தேசத்தை ஆண்டு வந்தான். 6-ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை வெவ்வேரு மன்னர்கள்
கோயில்களை கட்டினர். அவர்களில் முக்கியமானவர்கள் ஜயவர்மன், இந்திர வர்மன்,
ஹர்ஷ வர்மன் மற்றும் ராஜேந்த்ர வர்மன் ஆவர். சூரிய வர்மனது ஆட்சி
காலத்தில் கமய் கட்டிட கலையின் வளர்ச்சி உச்சத்தை தொட்டது. "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!
கோவில்
கட்டமைப்பு:
இந்த கோயிலின் வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம்
பாதியில் தொடங்கியது. 27 வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்"
இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது. இன்றைக்கு
இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம்
கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி
உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது
கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு புறச்
சுற்றுச்சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள். நான்கு
திசைகளில் வாயில்கள், ஒரு அகழி, மூன்று மண்டபங்கள், மத்தியில் ஐந்து கோவில்கள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் அங்கோர் வாட் கோவிலின் அமைப்பு.
தூண்களின் மேல்புறம் தாமரை வடிவ அலங்காரங்களும்,
சுவர்களில் நடன மாதர்கள், ஆண்கள், அப்சரஸ், விலங்குகள் இவர்களின் உருவங்கள் காணப்படுகிறது.
இரண்டாவது மண்டபத்தில் புடைப்பு சிற்பங்களும் மஹாபாரத காப்பியங்களும் காணபடுகிறது. வாலிவதம், காம தகனம், அமிர்தம் எடுத்தல், இவையும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. நடுத்தர சுவர்களில் செதுக்கி அமைக்கபட்ட சிற்பங்கள் சொர்க்கம், நரகத்துக்கு செல்லும் பாதையை தெளிவாக விவரிக்கிறது.
இரண்டாவது மண்டபத்தில் புடைப்பு சிற்பங்களும் மஹாபாரத காப்பியங்களும் காணபடுகிறது. வாலிவதம், காம தகனம், அமிர்தம் எடுத்தல், இவையும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. நடுத்தர சுவர்களில் செதுக்கி அமைக்கபட்ட சிற்பங்கள் சொர்க்கம், நரகத்துக்கு செல்லும் பாதையை தெளிவாக விவரிக்கிறது.
தளத்தினுலுள்ள ஒரு சிற்பம்… வாசுகியை மத்தாக கொண்டு பாற்கடலை, தேவர்களும், அசுரர்களும் கடையும் காட்சி. இதில் 92 அசுரர்களையும், 88 தேவர்களையும் மிகத்தெளிவாக காட்டியுள்ளனர்.
1586 ஆம் ஆண்டு Antonio da Madalena என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்ட இந்தப் படைப்பை அவர் " It is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of" என்று விவரித்துள்ளார்.
பின்னாட்களில் இந்து மதத்தவர் புத்தர் சிலைகளையும்
அதே போல் புத்த மதத்தவர் இந்து கடவுளின் சிலைகளையும் தாக்கி அழித்தனர். இயற்கை சீற்றங்களினால் அழிவு,
பல்வேறு நாடுகளின் தாக்குதல், மற்றும் உள் நாட்டு போரினாலும் பல சிலைகளில் பாதிப்பு ஏற்பட்டன. இவ்வாறு படிப்படியாக இக்கோயில்கள்
பராமரிப்பின்றி பாழ் அடைந்த
நிலைக்கு தள்ளப்பட்டன. பின்னாட்களில் ஆண்டகளாக நடைபெற்ற போரினால் அரசியல்,
நாட்டின் பண்பாடு, சமூகம் போன்ற அனைத்து துறைகளும் சிதைந்து காணப்பட்டது.
2000-ம் ஆண்டுலிருந்து கம்போடியாவில்
மறுமலர்ச்சி ஏற்பட்டது. இந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்கு ஜப்பான், ஆஸ்ட்ரேலியா, ஜெர்மனி, கனடா மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகள் பொருளாதார உதவி வழங்கின. உலக சுற்றுலா பயணிகளின் பார்வையை தன் பக்கம்
இழுத்துக்கொண்டுள்ளது கம்போடியா. இந்த கோவில்
தற்பொழுது (1990 இல் இருந்து) Sok Kong Import
Export Company என்ற தனியார் கம்பெனி
மூலமாக, சுற்றுலா தலமாக பராமரிக்கப்பட்டு
கம்போடியா நாட்டுக்கு மிகப்பெரும் வருமானத்தை
கொடுத்துக்கொண்டு வருகிறது. 2005
ஆம் ஆண்டு கணக்கு படி சுமார் 7,00,000 பேர் வருடத்திற்கு வந்து செல்கின்றனர்.
அங்கோர் வாட் சுற்றுலா
வழிகாட்டிகள் அவர்களின் பேச்சு வழக்கில் நமது புராண கதைகளையே விவரிக்கின்றனர்.
அங்கோர் வாட் கோவிலே கம்போடியாவின் சின்னமாக தேசிய கொடியிலும் இடம் பெற்றுள்ளது.
கம்போடியாவின்
முன்னேற்ற பாதைக்கு அங்கோர் வாட் கோயிலுக்கும் ஒரு பெரும் பங்கு உண்டென்பதில்
சந்தேகமே இல்லை.
இந்த 2012
வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம்
வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க
முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு
கட்டிடமும் பதிவாகின்றது.
இயற்கையின் தாக்கத்தாலும், உள் நாட்டு கலவரத்தினாலும் அழிந்தது போக மிச்சம் இருப்பதே இவ்வளவு பிரம்மாண்டம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ்
மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும்
கேள்விக்குறியே!!
கோவிலைப் பற்றிய மேலும் சில தகவல்களுடன் புகைப்படங்கள்..